
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, குட்டத்து ஆவாரம்பட்டியில், புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:
சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த அரசு உங்கள் அரசு; மக்களுக்கான அரசு; இதில் எந்த பாகுபாடும் இல்லை. கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டு வரக்கூடிய அனைவருக்கும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கியில் கால் வைக்காதவர்கள் கூட கடன் கேட்டு வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக கடன் கொடுக்க வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் ஏதேனும் குளறுபடி நடந்தால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடன் கேட்டு வருபவர்களிடம் மற்ற வங்கிகளில் இருந்து சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லாமல் கடன் கொடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் போது முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டவர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசாங்க பணியில் சேர எந்த ஒரு லஞ்சமும் இல்லாமல் வெளிப்படைத் தன்மையோடு கண்டிப்பாக வேலை கொடுக்கின்ற ஆட்சி தான் தளபதி ஆட்சி.
கோவையில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம்; பரபரப்பு!
நிச்சயமாக தகுதி உள்ளவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும். தமிழகத்தில் பால் மாடுகளை வளர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு தேவையான தீவனத்திற்கான தொகையை அரசாங்கமே கொடுக்கின்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் இந்த அறிவிப்பால் குடும்பத் தலைவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE