Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 November 2021

ஆன்லைனில் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது


சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்தக் கோரிக்கை
போதிய கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம்
கடைசி நேரத்தில் இப்படி செய்யக் கூடாது என்று மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் கடந்த கல்வியாண்டின் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் பெரும்பாலான நாட்கள் ஆன்லைனிலேயே கழிந்துவிட்டன. தற்போது கொரோனா பரவலின் இரண்டாவது அலை குறைந்துள்ளதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்தக் கோரி, அந்தப் பள்ளிகளில் படிக்கும் 5 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இவர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 10, 12ஆம் வகுப்பு மற்றும் செமஸ்டர் தேர்வு உட்பட அனைத்தையும் நேரடியாக நடத்தாமல்,

ஆன்லைன் மூலம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேர்வுகள் நடத்துவதற்கு உரிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு 40 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதிய அறையில் தற்போது 12 பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தேர்வு மையங்களின் என்ணிக்கையும் 15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வும் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கடைசி நேரத்தில் இதுபோன்று வழக்கு தொடர்ந்து கல்வி நடைமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதையடுத்து அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டனர். இதேபோல் தமிழகத்தில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நடத்தக் கோரி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி தமிழக அரசு பூர்த்தி செய்யுமா? இல்லை நீதிமன்றத்தை நாடுவார்களா? என்று கேள்விகள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES