Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

29 November 2021

கனமழை காரணமாக (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

12 + மாவட்டங்களுக்கு விடுமுறை


பள்ளி விடுமுறை

நீலகிரி

கடலூர்

இராமநாதபுரம் 

காஞ்சிபுரம்
 
செங்கல்பட்டு

தேனி

நெல்லை

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல் 

சிவகங்கை

மதுரை

திருவள்ளுர்

தூத்துக்குடி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் (30.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

குறிப்பு:
வேறு ஏதேனும் பள்ளி / கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும் தாங்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் கிளிக்செய்து பார்க்கவும்

வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என கூறினார்.

மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியில் கன மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டார்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அந்தமான் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனக்கூறிய அவர், அரபிக்கடல் பகுதியில் மேலும், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என அறிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக அவர் கூறினார். குமரிக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், கேரள கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டில் நாளை முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக புவியரசன் தெரிவித்துள்ளார்.






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES