சென்னை-புதுச்சேரி இடையே நேற்றிரவு 100 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நள்ளிரவு 1.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி முழுமையாகக் கரையைக் கடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து வந்ததால் நள்ளிரவுக்கு பின்னர் மழையும் குறையத் தொடங்கியது. கடலோர பகுதிகளில் மட்டும் பலமான காற்று வீசியது.
இன்றும் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை கள்ளக்குறிச்சி , விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE