ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர்சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயன்பாடு, தொழில்நுட்ப திறன்வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக, 12,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2-ம் கட்டமாக 76,804 முதுநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட கருத்தாளர்கள் மூலம் ஆகஸ்ட் 23-ம் தேதி (நாளை) முதல் 27-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகளை தயாராக செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE