Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 August 2021

உள்ளாட்சி தேர்தல்- வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட போது புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படவில்லை. மேற்கண்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்துக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் படி, 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாரானதுடன்,. அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமனம் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் முழு முனைப்புடன் தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES