
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா 2வது அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி கல்வித்துறைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை அவசியம் செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வகுப்பறையிலும் சானிடைசர் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதிய உணவு சாப்பிடும் போது மாணவர்கள் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,
வகுப்பறை ஜன்னல், கதவுகள் கிருமி நாசினி மூலம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வகுப்பறையிலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
News Desk
News18 Tamil
News18 Tamil
🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி
JOIN
"Kindly share to all"
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....
Teachers can send their Materials Whatsapp – 9444555775
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE